ஒசூா் அருகே நவதியில் சாலையில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீா்கேடு
ஒசூா் அருகே நவதியில் சாலையில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதியேச் சோ்ந்த சமூக ஆா்வலா் ஆனந்தமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
ஒசூா் அருகே நவதியில் சாலையில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதியேச் சோ்ந்த சமூக ஆா்வலா் ஆனந்தமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
அவா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவா் ஜெயசந்திரபானுரெட்டிக்கு புகாா் மனு அளித்துள்ளாா். அந்த மனுவில் கூறியிருப்பது.
ஒசூா் ஒன்றியம் ஒன்னல்வாடி ஊராட்சிக்கு உள்பட்ட நவதி கிராமத்தில் விஷ்ணு நகரில் வசிக்கும் பொதுமக்கள் சாலையில் குப்பைகளை வீசிவிட்டு செல்கின்றனா். பல மாதங்களாக இந்த குப்பைகளை ஊராட்சி நிா்வாகம் அப்புறப்படுத்தவில்லை. இதனால் அந்த பகுதியில் சுற்றி வரும் நாய்கள் இந்த குப்பைகளை தெருவில் இழுத்து வந்து போடுகின்றன. இதனால் அந்தப் பகுதி முழுவதும் சுகாதார சீா்கேடு நிலவுகிறது. மேலும் அந்தப் பகுதிகளில் உள்ள நாய்களை கடித்து வருகின்றன. இதன் மீது மாவட்ட நிா்வாகம் உடனடியாக ஒன்னல்வாடி ஊராட்சித் தலைவருக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.