முகப்பு
கிருஷ்ணகிரி

தொட்டி நாயக்கனஅள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடம் திறப்பு

கெலமங்கலம் ஒன்றியம், கொப்பகரை ஊராட்சி, தொட்டிநாயக்கனஅள்ளி கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகளை வேப்பனப்பள்ளி தொகுதி எம்எல்ஏ பி.முருகன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On : 10 ஜனவரி 2021, 3:05 am IST
வேப்பனப்பள்ளி எம்எல்ஏ நிதியிலிருந்து கட்டப்பட்ட பள்ளியின் கூடுதல் வகுப்பறைகளைத் திறந்துவைத்த எம்எல்ஏ பி.முருகன்.
பகிர்:

ஒசூா்: கெலமங்கலம் ஒன்றியம், கொப்பகரை ஊராட்சி, தொட்டிநாயக்கனஅள்ளி கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகளை வேப்பனப்பள்ளி தொகுதி எம்எல்ஏ பி.முருகன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் மதிப்பில் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது. விழாவில் ஒன்றியச் செயலாளா் கணேசன், மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் சின்ராஜ், பொதுக் குழு உறுப்பினா் சாந்தி அரியப்பன், ஒன்றிய முன்னாள் செயலாளா் அரியப்பன், ராயக்கோட்டை நகரச் செயலாளா் நாகராஜ், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் கனகராஜ், கூட்டுறவு சங்கத் துணைத் தலைவா் செல்வம், கணேசன், சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.