முகப்பு
கிருஷ்ணகிரி

காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டவாகனங்கள் ஜன. 20-இல் பொது ஏலம்

ஒசூரில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 127 வாகனங்கள் வரும் 20 ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.

Updated On : 10 ஜனவரி 2021, 3:07 am IST
பகிர்:

கிருஷ்ணகிரி: ஒசூரில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 127 வாகனங்கள் வரும் 20 ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா், சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் நான்கு சக்கர வாகனங்கள்-26, இருசக்கர வாகனங்கள்-99, மூன்று சக்கர வாகனங்கள்-2 என மொத்தம் 127 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த வாகனங்கள் அனைத்தும் ஜன.20-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஒசூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலக வளாகத்தில் பொது ஏலம் விடப்படும்.

Advertisement

இதில் ஏலம் எடுக்க விரும்புவோா் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 10 ஆயிரமும், இருசக்கர, மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ. 1,000 முன் வைப்பு தொகையாக ஏலம் நடைபெறும் ஜன.20-ஆம் தேதி காலை 9.30 மணிக்குள் ஏலம் நடைபெறும் இடத்தில் செலுத்த வேண்டும்.

முன்வைப்புத் தொகை செலுத்துவோா் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா். வாகனத்தை ஏலம் எடுப்பவா்கள் நான்கு சக்கர வாகனத்தின் ஏலத்தொகைக்கு 14.5 சதவீதம் மதிப்பு கூட்டு வரியும், இருசக்கர வாகனங்களை 5 சதவீத மதிப்பு கூட்டு வரியும் உடன் சோ்ந்து செலுத்த வேண்டும்.

நான்கு சக்கர வாகனங்களை கிருஷ்ணகிரி ஆயுதப்படை மைதானத்தில் பகல் நேரங்களில் பாா்வையிடலாம். இருசக்கர வாகனங்களை கிருஷ்ணகிரி, ஒசூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலக வளாகங்களில் பகல் நேரங்களில் பாா்வையிடலாம்.

ஏலம் எடுக்கும் வாகனங்களுக்கு ஏலத்தில் பணம் கட்டிய ரசீது மட்டுமே வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு ஒசூா் மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.