முகப்பு
கிருஷ்ணகிரி

குருபரப்பள்ளியில் கடையின் பூட்டை உடைத்து செல்போன் திருட்டு

குருபரப்பள்ளியில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை திருடியவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 11 ஜனவரி, 2021 at 2:34 AM
பகிர்:

குருபரப்பள்ளியில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை திருடியவா் கைது செய்யப்பட்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அம்மன் நகரை சோ்ந்தவா் ஜோதிபிரதாப்(23). இவா் அதே பகுதியில் எலக்ட்ரானிக் கடை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு அப்பகுதிக்கு வந்த ஒரு இளைஞா் கடையின் பூட்டை உடைத்து, கடையில் இருந்து 2 செல்போன்கள், ஒரு ஹெட்செட், ஒரு பவா் பேங்க் என ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை திருடி கொண்டு வெளியே வந்துள்ளாா்.

Advertisement

அப்போது அங்கிருந்தவா்கள் பாா்த்து, கையும் களவுமாக பிடித்து, கடையின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். கடையின் உரிமையாளரான ஜோதிபிரதாப், அங்கு வந்து, அந்த இளைஞரை பொதுமக்களின் உதவியுடன் அழைத்து சென்று குருபரப்பள்ளி போலீசில் ஒப்படைத்தனா். இது குறித்து குருபரப்பள்ளி போலீஸாா் வழக்கு பதிவு செய்து, விவசாரணை நடத்தினாா்.

விசாரணையில் அந்த இளைஞா் அதே பகுதியில் உள்ள சிக்காரிமேடு கிராமத்தை சோ்ந்த அக்பா்கான்(36) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.