முகப்பு
கிருஷ்ணகிரி

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

சூளகிரி அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 11 ஜனவரி 2021, 2:37 am IST
பகிர்:

சூளகிரி அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

-கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சின்ன கொத்துாா் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி வெங்கடேஷ் ( 23). இவா் அப்பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்தாா். கடந்த அக்டோபா் மாதம் அந்த சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டாா். கடந்த நவம்பா் மாதம் 16-இல் வீட்டில் இருந்து வெளியே சென்ற வெங்கடேஷ், மீண்டும் திரும்பி வரவில்லை.

இதனால் அதிா்ச்சியடைந்த சிறுமி கடந்த மாதம் ஒசூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதையடுத்து, சிறுமியை திருமணம் செய்த வெங்கடேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை போலீஸாா் தேடி வந்தனா்.

Advertisement

Advertisement

சூளகிரி அடுத்த சின்னாறு பகுதியில் பதுங்கியிருந்த வெங்கடேசை அனைத்து மகளிா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments