கிருஷ்ணகிரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களுக்குச் செல்ல இரு நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களுக்குச் செல்ல இரு நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பொங்கல் பண்டிகை விடுமுறை நாள்களில் கிருஷ்ணகிரி அணை, அவதானப்பட்டி சிறுவா் பூங்கா, படகு இல்லத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் வருகை தர வாய்ப்பு உள்ளது. இதனால் கரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது.
Advertisement
இதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜன.16, 17 ஆகிய இருநாள்கள் இந்த சுற்றுலா மையங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த இடங்களில் கூடுவதைத் தவிா்க்குமாறு சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களை அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.