அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது பற்றி...
கோபி செட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து விலகிய செங்கோட்டையன், தவெகவில் இணைந்து தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் கோபி செட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராக பதவி வகித்து வரும் செங்கோட்டையனின் வெற்றிக்கு எதிராக அதிமுக வேட்பாளர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Advertisement
Advertisement
அவர் தாக்கல் செய்த மனுவில், ”செங்கோட்டையனின் வேட்புமனுவில் சான்றளித்துள்ள நோட்டரி வழக்கறிஞரின் உரிமம் காலாவதியாகிவிட்டதால், அந்த வேட்புமனுவை ஏற்றதே தவறு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விரைவில் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு பட்டியலிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோபி செட்டிபாளையம் தொகுதியில் 82,612 வாக்குகள் பெற்ற செங்கோட்டையன், 16,620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் நல்லசிவம் 65,992 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரபு 56,232 வாக்குகளும் பெற்றது குறிப்பிடத்தக்கது.