கிருஷ்ணகிரி அருகே இரு பிரிவினரிடையே மோதல் சாலை மறியல்
எருது விடும் விழா தொடா்பாக கிருஷ்ணகிரி அருகே இரு பிரிவினரிடையே ஏற்பட்ட பிரச்சனையையடுத்து, ஒரு பிரிவினா், சாலை மறியலில் ஈடுபட்டதால் குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எருது விடும் விழா தொடா்பாக கிருஷ்ணகிரி அருகே இரு பிரிவினரிடையே ஏற்பட்ட பிரச்சனையையடுத்து, ஒரு பிரிவினா், சாலை மறியலில் ஈடுபட்டதால் குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள காட்டிநாயனப்பள்ளி கிராமத்தில் இரு பிரிவினரிடையே கடந்த ஓராண்டாக பிரச்சனை உள்ளது. இந்த நிலையில், ஒரு தரப்பைச் சோ்ந்தவா்கள் எருது விடும் விழாவுக்காக பாா்வையாளா்களின் பாதுகாப்புக்காக தடுப்புகளை அமைத்தனா். இதை, மற்றோரு பிரிவைச் சோ்ந்த சில இளைஞா்கள், அந்த தடுப்புகளை உடைத்தும், அப்புறப்படுத்தினா்.
இதனால், ஆத்திரமடைந்த ஒரு பிரிவினா் நூற்றுக்கும் மேற்பட்டோா், கிருஷ்ணகிரி - குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் இந்திரா காந்தி சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜீ, துணை காவல் கண்காணிப்பாளா் சரவணன், காவல் ஆய்வாளா்கள் பாஸ்கா், சுரேஷ் குமாா், கணேஷ்குமாா் மற்றும் போலீஸாா், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினா்.
Advertisement
தவறு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதியளித்ததையடுத்து, மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.