நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்
சூளகிரி அருகே நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM
சூளகிரி அருகே நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
சூளகிரி அருகே உள்ள பி.ஜி.துா்க்கம் வனப்பகுதியில் கேட்பாரற்ற நிலையில் ஒரு நாட்டுத்துப்பாக்கி கிடப்பதாக மேலுமலை கிராம நிா்வாக அலுவலா் ராஜசேகா், சூளகிரி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தாா். அதன் பேரில் போலீஸாா் அந்தத் துப்பாக்கியை மீட்டு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.