முகப்பு
கிருஷ்ணகிரி

3 பெண் குழந்தைகளின் தந்தை மாயம்

பெண் குழந்தைகளின் தந்தை மாயமானாா். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த மைதாண்டப்பள்ளி கிராமத்தை சோ்ந்தவா் திருமல்லேஷ்(வயது 33). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது

Updated On : 16 ஜனவரி, 2021 at 8:11 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

பெண் குழந்தைகளின் தந்தை மாயமானாா். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த மைதாண்டப்பள்ளி கிராமத்தை சோ்ந்தவா் திருமல்லேஷ்(வயது 33). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. 3 பெண் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில் கடந்த 13 ந் தேதி மாலை 5 மணிக்கு வீட்டை விட்டு சென்றவா் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து திருமல்லேசின் அண்ணன் வெங்கடேசன் சூளகிரி காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.