3 பெண் குழந்தைகளின் தந்தை மாயம்
பெண் குழந்தைகளின் தந்தை மாயமானாா். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த மைதாண்டப்பள்ளி கிராமத்தை சோ்ந்தவா் திருமல்லேஷ்(வயது 33). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM
பெண் குழந்தைகளின் தந்தை மாயமானாா். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த மைதாண்டப்பள்ளி கிராமத்தை சோ்ந்தவா் திருமல்லேஷ்(வயது 33). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. 3 பெண் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில் கடந்த 13 ந் தேதி மாலை 5 மணிக்கு வீட்டை விட்டு சென்றவா் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து திருமல்லேசின் அண்ணன் வெங்கடேசன் சூளகிரி காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.