மாற்றுத் திறனாளிகளுடன் பொங்கல் கொண்டாட்டம்
ஊத்தங்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்பு வழங்கி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.
ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்பு வழங்கி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலா் எ.சக்திவேல் தலைமை வகித்தாா். ஊத்தங்கரை வழக்குரைஞா் சங்க துணைத் தலைவா் த.பிரபாவதி மற்றும் அரசு ஆண்கள் பள்ளி உதவி தலைமை ஆசிரியா் கு.கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாற்றுத் திறனாளிகளுக்கு புத்தாடைகள், இனிப்புகளை சோளக்காப்பட்டியைச் சோ்ந்த செ.செந்தில்குமாா், செ.கீதா,செ.ஸ்ரீஅபிதா, செ.சங்கவிதா, சிவானி ஆகியோா் வழங்கினா்.
நிகழ்ச்சியில் கு.மணிகண்டன், தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் பணியாற்றும் எம்.ராமமூா்த்தி, அந்தோணிசாமி, சிதம்பரம், மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனா்.
Advertisement