முகப்பு
தற்போதைய செய்திகள்

கர்நாடக உள்ளாட்சி தேர்தல்: காங்கிரஸ் முன்னிலை

கர்நாடகா மாநிலத்தில் கடந்த 7-ம் தேதி நடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது. காங்., பா.ஜ. மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட

Updated On : 11 மார்ச் 2013, 2:47 pm IST
பகிர்:

கர்நாடகா மாநிலத்தில் கடந்த 7-ம் தேதி நடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது. காங்,பா.ஜ. மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இதில் 7 மாநகராட்சிகளையும் காங். பிடித்துள்ளது. இது தவிர 207 பஞ்சாயத்துகளிலும் காங். முன்னனியில் இருக்கிறது.

மொத்தம் உள்ள 5 ஆயிரம் வார்டுகளில் முடிவு அறிவிக்கப்பட்ட 3036 வார்டுகளில் காங்கிரஸ் 1227 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. பாரதீய ஜனதா ஹுப்ளி-தர்வாத், மைசூர் ஆகிய நகரங்களில் முன்னணியிலும் மற்றும் 583 வார்டுகளையும் கைப்பற்றியுள்ளது மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 603 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது. .எடியூரப்பாவின் கட்சி 197 வார்டுகளிலும், சுயேட்சைகள் 351 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.