பி.சி. சாக்கோவை நீக்க முடியாது : மீரா குமார்
நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் பி.சி. சாக்கோவை நீக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு சபாநாயகர் மீரா குமார் பதில் அளித்துள்ளார்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:10 PM
நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் பி.சி. சாக்கோவை நீக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு சபாநாயகர் மீரா குமார் பதில் அளித்துள்ளார்.
2ஜி அலைக்கற்றை ஊழலை விசாரித்து வரும் நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் பி.சி. சாக்கோவை நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், மக்களவை சபாநாயகர் மீரா குமார் இன்று கடிதம் வாயிலாக அதற்கு பதில் அளித்துள்ளார்.
அதில், எந்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவரையும் நீக்குவது அவ்வளவு சுலபமல்ல. அதற்கு விதிமுறைகள் அனுமதிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
Advertisement