ஆட்டை பலி கொடுத்து பூஜை நடத்திய பன்சாலின் மனைவி
ரயில்வே அமைச்சராக இருந்த பவன் குமார் பன்சாலின் மனைவி, தனது கணவரின் பதவியைக் காப்பாற்றுவதற்காக ஆட்டை பலிகொடுத்து பூஜை நடத்தியுள்ளார்.
ரயில்வே அமைச்சராக இருந்த பவன் குமார் பன்சாலின் மனைவி, தனது கணவரின் பதவியைக் காப்பாற்றுவதற்காக ஆட்டை பலிகொடுத்து பூஜை நடத்தியுள்ளார்.
உயர் பதவி பெற்றுத் தருவதற்காக லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், பவன் குமார் பன்சாலுக்கும் தொடர்பிருப்பதாக சிபிஐ கூறியிருந்ததை அடுத்து, அவரது பதவிக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்த சிக்கலைப் போக்க ஆட்டை பலி கொடுத்து பன்சாலும், அவரது மனைவியும் நேற்று அவரது வீட்டில் பூஜை செய்துள்ளனர்.
ரயில்வே அமைச்சராக இருந்த பவன்குமார் பன்சால் பதவி விலகியதை அடுத்து, இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
Advertisement