முகப்பு
தற்போதைய செய்திகள்

எல்லையில் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த இந்தியாவுக்கு உரிமை உண்டு: ஏ.கே. அந்தோனி

நமது எல்லைப் பகுதியில் ராணுவம் மற்றும் விமானப்படை தொடர்ந்து தங்கள் கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து மேம்படுத்தும். ஒவ்வொரு நாட்டுக்கும் தங்கள் எல்லையில் தேவையான கட்டமைப்பு வசதிகளை

Updated On : 11 மே 2013, 6:19 pm IST
பகிர்:

எல்லையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்தியாவுக்கு உரிமை உண்டு என பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி கூறியுள்ளார்.லடாக் எல்லையில் சீன ஊடுருவல் சம்பவம் நடைபெற்று முடிந்த நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்கக்கது.

கோவா அடுத்த ஐ.என்.எஸ். ஹன்சா கடற்படைத் தளத்தில் மிக்-29 கே ரக விமானங்களை கடற்படையில் இணைக்கும் விழாவின் போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நமது எல்லைப் பகுதியில் ராணுவம் மற்றும் விமானப்படை தொடர்ந்து தங்கள் கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து மேம்படுத்தும். ஒவ்வொரு நாட்டுக்கும் தங்கள் எல்லையில் தேவையான கட்டமைப்பு வசதிகளை செய்ய உரிமை உண்டு.அத்தகைய வசதிகளை மேற்கொள்ள சீனாவுக்கு உரிமை இருக்கும் போது இந்தியாவுக்கும் அதே உரிமை உள்ளது. கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணி பல்வேறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என அவர் கூறினார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.