முகப்பு
தற்போதைய செய்திகள்

கபில் சிபலுக்கு சட்டத் துறை; ஜோஷிக்கு ரயில்வே

தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் சட்டத் துறையையும், சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சி.பி. ஜோஷி ரயில்வே அமைச்சகத்தையும் கூடுதலாக பொறுப்பேற்க உள்ளனர்.

Updated On : 11 மே 2013, 2:48 pm IST
பகிர்:

தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் சட்டத் துறையையும், சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சி.பி. ஜோஷி ரயில்வே அமைச்சகத்தையும் கூடுதலாக பொறுப்பேற்க உள்ளனர்.

சட்டத் துறை அமைச்சராக இருந்த அஸ்வனி குமாரும், ரயில்வே அமைச்சராக இருந்த பவன்குமார் பன்சாலும் பதவி விலகியதை அடுத்து, இவ்விரு துறைகளையும், கபில் சிபலும், ஜோஷியும் கூடுதல் பொறுப்பாக ஏற்று கவனிக்க உள்ளனர்.

மத்திய அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த மாற்றம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

Advertisement

கடந்த ஆண்டும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் முகுல் ராய், ரயில்வே அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகியதை அடுத்து, ஜோஷி தான் ரயில்வே அமைச்சகப் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.