முகப்பு
தற்போதைய செய்திகள்

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தினால் அதில் இந்தியா பங்கேற்க கூடாது: ஜி.கே.வாசன்

மத்திய அரசு எந்த பிரச்சினையையும் பாராளுமன்றத்தில் விவாதிக்க தயாராக உள்ளது. ஆனால் எதிர்கட்சிகள் இதை ஏற்றுக் கொள்ளாமல் பாராளுமன்றத்தை முடக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். கர்நாடகத்தில்

Updated On : 11 மே 2013, 3:19 pm IST
பகிர்:

மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்:-

மத்திய அரசு எந்த பிரச்சினையையும் பாராளுமன்றத்தில் விவாதிக்க தயாராக உள்ளது. ஆனால் எதிர்கட்சிகள் இதை ஏற்றுக் கொள்ளாமல் பாராளுமன்றத்தை முடக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். கர்நாடகத்தில் நிலையான உறுதியான ஆட்சியை தேர்வு செய்து உள்ளார்கள். தமிழக விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இலங்கையில் நடத்தினால் அதில் இந்தியா பங்கேற்க கூடாது என்று வலியுறுத்துவோம்.

கூடங்குளம் அணு மின்நிலையத்தில் மின் உற்பத்தியை தொடங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அங்கு மின் உறபத்தி தொடங்கி விட்டால் தமிழகத்தில் ஓரளவு மின் பற்றாக்குறை நீங்கும் என்று அவர் கூறினார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.