சேலம்: மல்லியகரை அருகே 80 வயது மூதாட்டி பாலாத்காரம் செய்தவர் கைது; மூதாட்டி கவலைக்கிடம்
தம்மம்பட்டி அருகே மல்லியகரையடுத்த கோபாலபுரத்தில் 80 வயது மூதாட்டியை நள்ளிரவில் பலாத்காரம் செய்தவரை
தம்மம்பட்டி அருகே மல்லியகரையடுத்த கோபாலபுரத்தில் 80 வயது மூதாட்டியை நள்ளிரவில் பலாத்காரம் செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே மல்லியகரை காவல்நிலையத்திற்குட்பட்ட கோபாலபுரத்தில் 80 வயது மூதாட்டி செல்லம்மாள் (கணவர் நாராயணன் இறந்துவிட்டார்) தனியே வசித்து வருகிறார்.
கோபாலபுரம் அருகே வேப்பிலைக்கொட்டை என்ற ஊரைச்சேர்ந்த குமரக்கவுண்டரின் மகன் பழனிவேல்(41) அப்பகுதியில் காய்கறி,கீரைகளை விற்பனை செய்து வருகிறார்.
Advertisement
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு குடிபோதையில் இருந்த பழனிவேல், வீட்டில் தனியே தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி செல்லம்மாளை பலாத்காரம் செய்துள்ளார்.
தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் செல்லம்மாள், சேலம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆத்தூர் டி.எஸ்.பி.சிவ.வேளியப்பன்,தம்மம்பட்டி இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் வழக்குப்பதிந்து, பழனிவேலை இன்று கைது செய்து ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.