திருப்பதி மலைப்பாதையில் விபத்துக்குள்ளான பேருந்து : பக்தர்கள் தப்பினர்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த பேருந்து ஒன்று மலைப்பாதையில் விபத்துக்குள்ளானது. எனினும் பக்தர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த பேருந்து ஒன்று மலைப்பாதையில் விபத்துக்குள்ளானது. எனினும் பக்தர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.
இன்று காலை 5.30 மணியளவில் ஆந்திர அரசு பேருந்து ஒன்று மலைப்பாதையில், பக்தர்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது, சமயோஜிதமாக செயல்பட்டு ஓட்டுநர் பிரேக் போட்டு பேருந்தை நிறுத்தினார். மலைப்பாதையில் இருந்து சற்று விலகி அந்தரத்தில் தொங்கியவாறு நின்ற பேருந்தில் இருந்து பக்தர்கள் காயமின்றி இறங்கி மற்றொரு பேருந்து மூலமாக கீழ் திருப்பதிக்கு வந்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.