பாகிஸ்தானில் தொடரும் தாக்குதல் : அஞ்சாமல் ஒட்டளிக்கும் பொதுமக்கள்
பாகிஸ்தானின் பொதுத் தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், தாலிபான் பயங்கரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:10 PM
பாகிஸ்தானின் பொதுத் தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், தாலிபான் பயங்கரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
அரசியல் கட்சி அலுவலகங்களையும், வேட்பாளர்களையும் குறி வைத்து இன்று நடத்தப்பட்ட பல்வேறு குண்டு வெடிப்பு தாக்குதல்களில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனினும், பல்வேறு வாக்குச்சாவடிகளில் இன்று ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
Advertisement
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை சுமார் 130 பேர் குண்டு வெடிப்புகளில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.