பிரதமர் தன்னை சுயபரிசோதனை செய்தால் ராஜினாமா செய்துவிடுவார் : ராஜ்நாத்
பிரதமர் தன்னை சுயபரிசோதனை செய்தால், வேறு வழியே இல்லாமல், ராஜினாமா செய்து விடுவார் என்று பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தன்னை சுயபரிசோதனை செய்தால், வேறு வழியே இல்லாமல், ராஜினாமா செய்து விடுவார் என்று பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான இரண்டு மத்திய அமைச்சர்கள் பதவி விலகிய நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், மத்திய அரசை மாற்றிவிட்டு புதிய அரசு அமைய வேண்டும். அது ஒன்றே தற்போதைய சிறந்த வழி என்று கூறினார்.
மேலும், நேற்று இரண்டு அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர். ஒருவர் அல்லது இருவர் பதவி விலகியிருப்பது விஷயமே இல்லை. ஒட்டு மொத்த நிர்வாகமே சீர்குலைந்திருக்கும் போது எந்த ஒரு சிறிய மாற்றமும் நீர்வாகத்தை சீர்திருத்திவிடாது. ஒரு வேளை பிரதமர் தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொண்டால், வேறு வழியே இல்லாமல் ராஜினாமா செய்து விடுவார் என்றும் ராஜ்நாத் கூறினார்.
Advertisement