முகப்பு
தற்போதைய செய்திகள்

ராஜினாமாவுக்குக் காரணம் தவறு செய்ததாக ஆகாது : அஸ்வனி குமார்

தான் ராஜினாமா செய்ததுக்குக் காரணம், தவறு செய்ததாக ஆகாது என்று முன்னாள் சட்டத் துறை அமைச்சர் அஸ்வனி குமார் தெரிவித்துள்ளார்.

Updated On : 11 மே, 2013 at 1:03 PM
பகிர்:

தான் ராஜினாமா செய்ததுக்குக் காரணம், தவறு செய்ததாக ஆகாது என்று முன்னாள் சட்டத் துறை அமைச்சர் அஸ்வனி குமார் தெரிவித்துள்ளார்.

சிபிஐ விசாரணை அறிக்கையை பகிர்ந்து கொண்ட விவகாரத்தில் பெரும் சர்ச்சை எழுந்து, உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளான சட்டத் துறை அமைச்சராக இருந்த அஸ்வனி குமார் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், இன்று அவரை சந்தித்த செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் குற்றமற்றவன் என்று எனக்குத் தெரியும். நான் எந்த தவறையும்  செய்யவில்லை. ராஜினாமா செய்ததாலேயே நான் தவறு செய்ததாக அர்த்தம் ஆகாது என்று கூறினார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.