வேலூரில் 111 டிகிரி
இந்த ஆண்டு கோடையில், இது வரை இல்லாத அளவுக்கு, வேலூரில் அதிக பட்சமாக 111 டிகிரி வெயில் கொளுத்தியது.சென்னை, கடலூர், தருமபுரி, கரூர் பரமத்தி, மதுரை,நாகப்பட்டினம், பாளையங்கோட்டை, சேலம்
தமிழகத்தின் 11 நகரங்களிலும், புதுச்சேரியிலும் சனிக்கிழமையன்று (மே 11) 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் சுட்டெரித்தது.
இந்த ஆண்டு கோடையில், இது வரை இல்லாத அளவுக்கு, வேலூரில் அதிக பட்சமாக 111 டிகிரி வெயில் கொளுத்தியது.சென்னை, கடலூர், தருமபுரி, கரூர் பரமத்தி, மதுரை,நாகப்பட்டினம், பாளையங்கோட்டை, சேலம், திருச்சி, திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக வாட்டி வதைத்தது.
வரும் நாள்களில் தமிழகத்தில் வெயிலின் அளவு மேலும் அதிகரிக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அடுத்த இரு நாள்களுக்கு வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அனல் காற்றுடன் கூடிய வெயில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement