அசாமில் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள்
அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில், சாலை பராமரிப்பின் போது நிலத்துக்கு அடியில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் கிடைத்துள்ளன.
அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில், சாலை பராமரிப்பின் போது நிலத்துக்கு அடியில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் கிடைத்துள்ளன.
திபோங் பகுதியில் சாலை விரிவாக்கத்தின் போது, தொழிலாளர்கள் பூமியை தோண்டிய போது ஏராளமான ஆயுதங்கள் கிடைத்தன. இவை அனைத்தும் இரண்டாம் உலகப் போர் நடந்த 1941 - 42ஆம் ஆண்டுகளின் பயன்படுத்தப்பட்டவை என்று தெரிய வந்துள்ளது. உடனடியாக அவை காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.