உத்தர்கண்ட் வெள்ளம் : நிதி அளிக்க கட்சியினருக்கு சோனியா உத்தரவு
உத்தர்கண்ட் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்டுள்ள பேரழிவை சமாளிக்க அனைத்து கட்சியினரும் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா உத்தரவிட்டுள்ளார்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:13 PM
உத்தர்கண்ட் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்டுள்ள பேரழிவை சமாளிக்க அனைத்துக் கட்சியினரும் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது ஒரு மாத ஊதியத்தை உத்தர்கண்ட் நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், உத்தர்கண்ட் மாநிலத்துக்கு அருகில் உள்ள மாநில முதல்வர்கள், வெள்ள பாதிப்பில் இருந்து உத்தர்கண்ட் மீள உதவி செய்யுமாறும் கோரியுள்ளார்.
Advertisement