முகப்பு
தற்போதைய செய்திகள்

உத்தர்கண்ட் வெள்ளம் : ஹரித்வாரில் 41 உடல்கள் மீட்பு

வெள்ளத்தில் சிக்கி பெரிதும் சேதமான ஹரித்வாரில் நடந்த மீட்புப் பணியின் போது 41 உடல்கள் மீட்கப்பட்டன.

Updated On : 21 ஜூன் 2013, 4:32 pm IST
பகிர்:

வெள்ளத்தில் சிக்கி பெரிதும் சேதமான ஹரித்வாரில் நடந்த மீட்புப் பணியின் போது 41 உடல்கள் மீட்கப்பட்டன.

உத்தர்கண்ட் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை இதோடு சேர்த்து 200 ஐ தாண்டுகிறது. உடல்கள் கிடைத்த வகையில் பலி எண்ணிக்கை 200 ஐ தாண்டினாலும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் மேல் இருப்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு புதைக்கும் பணிகளும் துவங்கியுள்ளன.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.