முகப்பு
தற்போதைய செய்திகள்

பழைய சோறு போட்டதற்காக திட்டிய மாமனாரை அடித்து காயப்படுத்திய மருமகள் கைது

வந்தவாசியை அடுóத்த கீழ்வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(75). இவரது மகன் கோவிந்தனின் மனைவி கலா(37). கடந்த திங்கள்கிழமை கலா

Updated On : 27 ஆகஸ்ட் 2014, 5:55 pm IST
பகிர்:

வந்தவாசி அருகே மாமனாரை தாக்கியதாக மருமகள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

  வந்தவாசியை அடுóத்த கீழ்வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(75). இவரது மகன் கோவிந்தனின் மனைவி கலா(37). கடந்த திங்கள்கிழமை கலா தனது மாமனார் கிருஷ்ணனுக்கு சாப்பாடு போட்டாராம். அப்போது ஏன் பழைய சாதம் போடுகிறாய் என்று கிருஷ்ணன் கேட்டாராம். இதனால் கோபமடைநத் கலா, அவரது தங்கை கலைவாணி(33) ஆகிய 2 பேரும் சேர்ந்து கிருஷ்ணனை தாக்கினராம். இதில் காயமடைந்த கிருஷ்ணன் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

  இதுகுறித்து கிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில் கலா, கலைவாணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த கீழ்க்கொடுங்காலூர் போலீஸார் கலாவை கைது செய்தனர். 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments