முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கை மீனவர்களால் சிறைபிடித்து விடுவிப்பு

நாகை மாவட்டம்,கோடியக்கரைக்கு அப்பால் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை மீனவர்களால் நடுக்கடலில் புதன்கிழமை இரவு சிறைபிடிக்கப்பட்ட பாம்பன் மீனவர்கள் 7 பேர்

Updated On : 5 மார்ச் 2015, 4:43 pm IST
பகிர்:

நாகை மாவட்டம்,கோடியக்கரைக்கு அப்பால் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை மீனவர்களால் நடுக்கடலில் புதன்கிழமை இரவு சிறைபிடிக்கப்பட்ட பாம்பன் மீனவர்கள் 7 பேர் விடுவிக்கப்பட்டதாக வியாழக்கிழமை மாலை தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்,இலங்கை மீனவர்களால் விரட்டியடிக்கப்பட்ட பாம்பன் மீனவர்கள் 5 பேர் வியாழக்கிழமை கோடியக்கரையில் கரைசேர்ந்தனர். பாம்பன் பகுதியைச் சேர்ந்தவர்கள் அகஸ்டீன்(42),முனுசாமி (39), பூரணம் (55), உ.செல்வம் (46),மாணிக்கம் (26),பாண்டி (37),செல்வம் (37)ஆகிய 7 பேரும் மீனவர்கள்.

கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்த மீனவர்களை புதன்கிழமை நள்ளிரவில் அங்கு வந்த இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் சுற்றி வளைத்து சிறைபிடித்தனர். இதன் பேரில் போலிசார் விசாரணை நடத்தினர். இதனிடையே,சிறைபிடிக்கப்பட்ட 7 மீனவர்களும் விடிவிக்கப்பட்டதாக வியாழக்கிழமை மாலை தகவல் வெளியானது.

Advertisement

Advertisement

5 பேர் விரட்டியடிப்பு:

இந்த நிலையில்,பாம்பனில் இருந்து ஒரு படகில் 2-ம் தேதி கடலுக்குச் சென்ற பாண்டி,சேகர்,முனீஸ்,முருகானந்தம்,டோாமினிக் ஆகிய 5 மீனவர்களை இலங்கை மீனவர்கள் விரட்டியடித்துள்ளனர். இவர்கள் 5 பேரிம் வியாழக்கிழமை பகல் கோடியக்கரை படகுத்துறைக்கு வந்தடைந்தனர

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments