முகப்பு
தற்போதைய செய்திகள்

அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்றச் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்

திண்டுக்கல்லில் அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்றச் சங்கம் சார்பில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவிலான உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

Updated On : 10 மே 2015, 2:45 pm IST
பகிர்:

திண்டுக்கல்லில் அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்றச் சங்கம் சார்பில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவிலான உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

மாநில தலைவர் மா. ராஜ்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில தலைவர் ரா. காசிப்பாண்டியன் போராட்டத்தை துவங்கிவைத்து பேசினார். அப்போது பள்ளிக் கல்வித்துறையில் 2015-16ம் ஆண்டில்  500 ஆசிரியர் பயிற்றுநர் பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமானம் செய்ய வேண்டும்.

சென்னை உயர் நீதிமனற மதுரை கிளையின் தீர்ப்பின்படி 885 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் செய்ய வேண்டும் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிகை வலியுறுத்தி  32 மாவட்டங்களை சேர்ந்த அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்றச் சங்கத்தினர் உண்ணாவிரதப்போராட்டதில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.