கேரளாவை ஒட்டியுள்ள 12 தமிழக மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர்
கேரளாவை ஒட்டியுள்ள 12 தமிழக மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கேரளாவை ஒட்டியுள்ள 12 தமிழக மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை எழும்பூர் தொற்று நோய் தடுப்பு குறித்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் கூறியதாவது: -
ஈரோடு மாவட்டம் பவானியில் டெங்கு காய்ச்சலால் கல்லூரி மாணவி பிரியதர்ஷினி உயிரிழந்துள்ளதாகவும் அந்தியூர் மற்றும் பவானியில் டெங்கு காய்ச்சலால் இதுவரை 6 பேர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
அடுத்த வாரம் முதல் தமிழகம் முழுவதும் ரோட்டோ வைரஸ் சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.