முகப்பு
தற்போதைய செய்திகள்

தாமிரவருணியில் 50,000 கனஅடி நீர் வெளியேற்றம்

நெல்லையில் உள்ள 5 அணைகளிலிருந்து தாமிரவருணி ஆற்றில் 50,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Updated On : 13 ஜனவரி 2021, 4:33 pm IST
அம்பாசமுத்திரம் பகுதியில் தாமிரவருணியில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளநீர் செல்கிறது
பகிர்:

நெல்லையில் உள்ள 5 அணைகளிலிருந்து தாமிரவருணி ஆற்றில் 50,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன.

இதையடுத்து, நேற்று முதல் பாபநாசம், மணிமுத்தாறு, கடனா, ராமாநதி சேர்வலாறு அணைகளிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வருவதால் நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில், தற்போது 5 அணைகளிலிருந்து 50,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகின்றது. அதிகபட்சமாக மணிமுத்தாறிலிருந்து 25,000 கனஅடி மற்றும் பாபநாசத்தில் 23,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments