கர்நாடகத்தில் அமைச்சரவை விரிவாக்கம்: புதிதாக 7 பேர் பதவியேற்பு
கர்நாடகத்தில் அமைச்சரவை விரிவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் புதிதாக 7 அமைச்சர்கள் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.
கர்நாடகத்தில் அமைச்சரவை விரிவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் புதிதாக 7 அமைச்சர்கள் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த முதல்வர் எடியூரப்பா அமைச்சரவை விரிவாக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று பிற்பகல் ஆளுநர் மாளிகையில் எம்.டி.பி.நாகராஜ், உமேஷ் கட்டி, அரவிந்த் லிம்பாவலி, முருகேஷ் நிரணி, ஆர்.சங்கர், சிபி யோகேஸ்வர், அங்காரா எஸ் ஆகிய 7 பேருக்கு கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
Advertisement
Advertisement
இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் கலந்து கொண்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.