முகப்பு
தற்போதைய செய்திகள்

தகவல் பெறும் உரிமைச் சட்ட நூல்கள்: ரூ.100 விலையில் கிடைக்கும்

தகவல் பெறும் உரிமைச் சட்ட நூல்களை ரூ.100 கட்டணத்தில் பெறலாம். இதுகுறித்து அறிவிப்பை அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. 

Updated On : 21 செப்டம்பர் 2019, 9:38 am IST
பகிர்:

தகவல் பெறும் உரிமைச் சட்ட நூல்களை ரூ.100 கட்டணத்தில் பெறலாம். இதுகுறித்து அறிவிப்பை அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. 

அதன் விவரம்: தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 மற்றும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் தொடர்பான அரசு உத்தரவுகளின் தொகுப்பு ஆகிய புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் புத்தகங்கள் தேவைப்படுவோர் அதனை, அண்ணா மேலாண்மை நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஒரு புத்தகத்தின் விலை ரூ.100. தபால் அல்லது கூரியர் செலவுடன் சேர்த்து ரூ.136-க்குக் கிடைக்கும். அண்ணா மேலாண்மை நிலையம், சென்னை-28 என்ற முகவரிக்கு வரைவோலை (ANNA INSTITUTE OF MANAGEMENT, CHENNAI-28) அனுப்பி நூலைப் பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments