பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்
தமிழ்நாட்டில் உற்பத்தியாகின்ற செங்கரும்பு, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் ஆகியவற்றை அரசு நேரடியாக கொள்முதல் செய்து பொங்கல் பண்டிகைக்கு வழங்க வேண்டும் ....
பாபநாசம்: தமிழ்நாட்டில் உற்பத்தியாகின்ற செங்கரும்பு, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் ஆகியவற்றை அரசு நேரடியாக கொள்முதல் செய்து பொங்கல் பண்டிகைக்கு வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
பாபநாசத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுடன் ஜி.கே.வாசன் பேசியதாவது:
தமிழ்நாட்டில் உற்பத்தியாகின்ற செங்கரும்பு, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் ஆகியவற்றை அரசு நேரடியாக கொள்முதல் செய்து பொங்கல் பண்டிகைக்கு வழங்க வேண்டும் , தஞ்சை ,நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, ஆகிய டெல்டா மாவட்டங்களில் தொடா் மழை, புயலால் பாதிக்கப்பட்ட சம்பா தாளடி நெற்பயிா்களுக்கு ஒரு விவசாயிகள் கூட விடுபடாமல் கணக்கெடுத்து அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரண வழங்க வேண்டும்.
Advertisement
Advertisement
மேலும், கரும்பு ,வாழை, வெற்றிலை, மஞ்சள் மற்றும் கிழங்கு வகைகள் முழுமையாக அடியோடு சாய்ந்து விட்டது. அதனை வேளாண்மை துறை அதிகாரிகளும், தோட்டக்கலை அதிகாரிகளும், ஆய்வு மேற்கொண்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். முழுமையாக பாதித்த நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ 35 ஆயிரம் வழங்க வேண்டும்.
ஆயிரம் நாட்களுக்கு மேலாக தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருமண்டங்குடி திருஆரூரான் கரும்பு விவசாயிகளுக்கு கரும்புக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,
தஞ்சாவூா் -அரியலூா் மாவட்டம் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே குடிகாடு மேல ராமநல்லூா் இடையே உயா்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கு உடனடியாக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றார்.
மேலும், தோ்தல் அறிவிப்புக்கு பின்னர் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி தொகுதிகள் குறித்து முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கூறினார்.
Red Sugarcane and jaggery should be provided for Pongal festival says G.K. Vasan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.