கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

மேற்கு வங்கம்: திரிணாமுல் காங். நிர்வாகி சுட்டுக்கொலை!

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங். நிர்வாகி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதைப் பற்றி...

DIN

மேற்கு வங்கம் மாநிலத்தில் திரிணாமுல் காங். கட்சியின் நிர்வாகி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாகிச் சூட்டில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

மால்டா மாவட்டத்தின் கலியாசக் பகுதியில் இன்று (ஜன.14) காலை அம்மாநிலத்தின் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங். கட்சியின் நிர்வாகிகளான ஹசன் ஷேக், பக்குல் ஷேக் மற்றும் அவரது உதவியாளரான எசாருதீன் ஷேக் ஆகிய மூன்று பேரும் நயாபஸ்தி பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவர்கள் மூவரின் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில், ஹசன் ஷேகின் உடலில் குண்டுகள் பாய்ந்து அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார் மற்ற இருவரும் காயமடைந்த நிலையில் மூவரும் மீட்கப்பட்டு மால்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு ஹசன் சேக் சிகிச்சைப் பலனின்றி பலியானார்.

இதையும் படிக்க: மோசமான வானிலை: ராஞ்சியில் ஏராளமான விமானங்கள் தாமதம்!

இதனைத் தொடர்ந்து, சம்பவம் நடந்த இடத்தில் அப்பகுதி காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்த போலீஸார் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஜன.2 அன்று இதே மால்டா மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியான துலால் சர்க்கார், அவரது சொந்த கட்சிக்காரர்களினாலே சுட்டுக்கொல்லப்பட்டதில் மால்டா நகர திரிணாமுல் காங். தலைவர் நரேந்திர நாத் கைது செய்யப்பட்டார்.

இதேப்போல், தற்போது கொல்லப்பட்ட ஹசன் ஷேக்கும் உள்கட்சி பூசல்களினால் கொல்லப்பட்டாரா என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த கொலை குறித்து ஆளும் கட்சியோ மற்றும் எதிர் கட்சியான பாஜகவும் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT