கோவை: கிணற்றில் தவறி விழுந்த 2 மான்கள் உயிருடன் மீட்பு
கோவை அருகே கிணற்றில் தவறி விழுந்த இரண்டு மான்களை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டு வனத் துறையிடம் ஒப்படைத்தனர்.
கோவை அருகே கிணற்றில் தவறி விழுந்த இரண்டு மான்களை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டு வனத் துறையிடம் ஒப்படைத்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் அடுத்த புத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் கிணற்றில் வழி தவறி விழுந்தது. இது குறித்து தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலை அடுத்து தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் அணில் குமார் மற்றும் சிறப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி இரண்டு மான்களையும் உயிருடன் மீட்டு, வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
Advertisement
Advertisement
அவா்கள் மானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பாதுகாப்பான வனப்பகுதிக்குள் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.