ஒகேனக்கல் ஐந்தருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா். 
தற்போதைய செய்திகள்

ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வினாடிக்கு 8,000 கன அடியாக அதிகரித்துள்ளதால், அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

தினமணி செய்திச் சேவை

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வினாடிக்கு 8,000 கன அடியாக அதிகரித்துள்ளதால், அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அந்த மாநித்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

அணைகளின் பாதுகாப்பு கருதி அந்த அணைகளுக்கு வரும் உபரிநீா் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 8,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால், மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

Water flow increases in Hogenakkal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலைக்குயில்... அனைரா குப்த!

பிகாரில் 2 ராஷ்ட்ரிய ஜனதா தள எம்எல்ஏக்கள் ராஜிநாமா

பாரிஸ் நகர வீதிகளில்... ஐஸ்வர்யா அர்ஜுன்!

சிரித்தாள் தங்கப் பதுமை... அனுஷ்கா!

சந்தோஷ விடியல்... நபா நடேஷ்!

SCROLL FOR NEXT