மது கடைகளை மூட அரசு முன் வருமா? - ஈ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி
தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிப்பதற்கு மது கடைகளை மூட அரசு முன் வருமா? என ஈ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி எழுப்பியிருப்பது தொடர்பாக...
தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிப்பதற்கு மது கடைகளை மூட அரசு முன் வருமா? என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் போதைப்பொருளை ஒழிக்க வேண்டும் என்பது தேவையான ஒன்றுதான். முதல்வராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக் கொண்ட அடுத்த நிமிடமே போதைப்பொருளை ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உத்தரவிட்டு இருப்பதை வரவேற்கின்றோம்.
அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளும் மேற்கொண்டு இருப்பதாக அறிகின்றோம் மகிழ்ச்சி.
Advertisement
Advertisement
போதைப்பொருள் பட்டியலில் மதுவையும் சேர்ப்பதற்கு அரசு முன்வருமா?, போதைப்பொருள் ஒழிப்பு என்றால் மது விற்பனை நடக்கக்கூடிய மது கடைகளும் மூடப்படுமா?
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த தேர்தலில் பெண்கள் அதிகமாக ஆளுங்கட்சிக்கு வாக்களித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
வாக்களித்த பெண்கள் விரும்புகிற மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா? தமிழகத்தில் அதிகமான மக்கள் போதைக்காக பயன்படுத்துகின்ற பொருளாக மது கடைகளில் விற்கின்ற மதுவாக இருக்கிறது.
மது கடைகளின் கிளைகளாகத்தான் மற்ற போதைப்பொருள்கள் விற்கப்படுவதாக தெரிகிறது.
மது கடைகள் மூடப்பட்டால் அரசு எதிர்பார்க்கிற அனைத்து போதைப்பொருள்களுடைய நடமாட்டமும் நின்றுவிடும்.
தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிப்பதற்கு மது கடைகளை மூட அரசு முன் வருமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Does the Eradication of Narcotics Mean Liquor Shops Will Also Be Closed?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.