ஆபரேஷன் சிந்தூர்: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சித்தாந்தப் போர்! - பாக். பாதுகாப்புப் படைகளின் தலைவர்
பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் தலைவர் ஆசிம் முனீர் பேச்சு...
இஸ்லாமாபாத் : இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த ஆண்டில் நடைபெற்ற சண்டையானது இரு சித்தாந்தங்களுக்கு இடையிலான போர் என்று பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் தலைவர் ஆசிம் முனீர் ஞாயிற்றுக்கிழமை(மே 10) தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்தாண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா ‘ஆபரேசன் சிந்தூர்’ ராணுவ தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அதற்கு பாகிஸ்தானும் எதிர்வினை தாக்குதல்களை நடத்தியது. 4 நாள்களாக நடைபெற்ற சண்டை அதன்பின் அமெரிக்கா தலையீட்டால் முடிவுக்கு வந்தது.
பாகிஸ்தான் தரப்பில் இந்தியாவுக்கு எதிரான சண்டைக்கு ‘மார்க்கா-இ-ஹக்’ எனப் பெயரிடப்பட்டது. அதன் ஓராண்டு நினைவு நாளையொட்டி நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய ஆசிம் முனீர், “இரு நாடுகளுக்கும் அல்லது இரு ராணுவங்களுக்கும் இடையே நடைபெற்ற மார்க்கா-இ-ஹக் வழக்கமானதொரு போரே அல்ல. ஆனால், நிஜத்தில் இரு சித்தாந்தங்களுக்கு இடையிலான தீர்க்கமானதொரு போர் அது” என்று குறிப்பிட்டார்.
Advertisement