ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2,000 கனஅடியாக சரிவு
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை மாலை 2,000 கனஅடியாக சரிந்தது குறித்து...
பென்னாகரம்: ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை மாலை 2,000 கனஅடியாக சரிந்தது.
கடந்த சில நாள்களாக தமிழக காவிரி கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி வினாடிக்கு 2,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, ஞாயிற்றுக்கிழமை காலை 3,000 கனஅடியாக அதிகரித்தது. பின்னா் மாலை நிலவரப்படி மீண்டும் 2,000 கனஅடியாக சரிந்தது.
இதனால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் சீராக தண்ணீா் கொட்டுகிறது.
Advertisement
Advertisement
summary