வீட்டுக்குள் லட்சுமி கடாட்சம் தாண்டவம் ஆட வேண்டுமா?
வீட்டுக்குள் லட்சுமி கடாட்சம் பெருக, இணையத்தில் பேசப்படும் சில பொருள்களைப் பற்றி..
பொதுவாகவே வீட்டை சுத்தமாகவும் எப்போதும் காற்றும், வெளிச்சமும் நிறைந்தபடி வைத்துக்கொண்டாலே, வீட்டுக்குள் லட்சுமி கடாட்சம் வந்துசேரும் என்பது மக்களின் நம்பிக்கை.
அதற்கேற்பவே, வாரத்தில், செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வீட்டை சுத்தம் செய்வது, விளக்கேற்றுவது, பண்டிகை நாள் என்றால், வீட்டை தோரணங்களால் அலங்கரித்து வைப்பது, விளக்கேற்றிய பிறகு வீட்டின் வாயில் கதவை மூடக் கூடாது என்று சொல்லும் நம்பிக்கைகளும் இணைந்து கொண்டன.
தற்போது வீட்டுக்குள் நேர்மறையான ஆற்றலைக் கொண்டு வரலாம் என்று இணையங்களில் பல பொருள்கள் விற்பனையாகி வருகின்றன.
Advertisement
Advertisement
அவற்றில், 7 நிறங்களைக் கொண்ட கிரிஸ்டல் மரமும் ஒன்று. வண்ண வண்ண நிற கற்களால் நவீனமாக வடிவமைக்கப்பட்ட இந்த கிரிஸ்டல் மரத்தை பலரும் அலங்காரத்துக்காகவும், லட்சுமி கடாட்சம் பெருகும் என்ற நம்பிக்கைக்காகவும் வாங்கிச் செல்கிறார்கள்.