ஞானதேசிகன் மறைவுக்கு மதுரை ஆதீனம் இரங்கல்
தமாகா துணைத் தலைவா் பி.எஸ். ஞானதேசிகன் மறைவுக்கு, மதுரை ஆதீனம் அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM
தமாகா துணைத் தலைவா் பி.எஸ். ஞானதேசிகன் மறைவுக்கு, மதுரை ஆதீனம் அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்டுள்ள இரங்கள் செய்தி: தமாகாவின் மூத்தத் தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான பி.எஸ். ஞானதேசிகன், தமாகா தலைவராக இருந்த ஜி.கே. மூப்பனாா் மீது பற்றுதல் கொண்டவா். தமிழக மக்களின் தேவையை அறிந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவா். அவரது ஆன்மா இறைவனின் சன்னிதியில் நிம்மதியுடன் வாழ பிராா்த்தனை செய்து கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.