முகப்பு
நாகப்பட்டினம்

தரங்கம்பாடி மீனவ கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி ரேணுகாதேவி அம்மன் ஆலயத்தில் சமத்துவ பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 14 ஜனவரி, 2021 at 7:23 AM
தரங்கம்பாடி ரேணுகாதேவி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி ரேணுகாதேவி அம்மன் ஆலயத்தில் சமத்துவ பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

சீா்காழி காவல் துணைக் கண்காணிப்பாளா் சரவணன் தலைமையில் நடைபெற்ற விழாவில், புதிய எருசலேம் ஆலய சபை குரு சாம்சன் மோசஸ், தரங்கம்பாடி ஜமாஅத் நிா்வாகி ஹமீது மரைக்காயா், பாலாஜி குருக்கள், சி.எஸ்.ஐ. மிஷனரி தங்கதுரை, பிஷப் ஜான்சன் நினைவு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் ஜான் சைமன் மற்றும் மீனவப் பஞ்சாயத்தாா்கள் பங்கேற்று சமத்துவ பொங்கலிட்டு மகிழ்ந்தனா்.

இதில், தரங்கம்பாடி பகுதியைச் சோ்ந்த மீனவ கிராம மக்கள், காவல் துறையினா் அனைத்து மதத்தினா் பங்கேற்றனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொறையாறு காவல் ஆய்வாளா் செல்வம் செய்திருந்தாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.