முகப்பு
நாமக்கல்

பரமத்தி வேலூரில் பூக்கள் விலை சரிவு

பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூக்கள் விலை சரிவடைந்தது.

Updated On : 3 ஜனவரி 2021, 1:32 am IST
பகிர்:

பரமத்திவேலூா்: பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூக்கள் விலை சரிவடைந்தது.

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகள், கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள், பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைகளுக்கு கொண்டுவந்து விற்பனை செய்கின்றனா்.

வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி, கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ. 2,000, சம்பங்கி கிலோ ரூ. 180, அரளி கிலோ ரூ. 280, ரோஜா கிலோ ரூ. 260, முல்லைப்பூ கிலோ ரூ.1,100, செவ்வந்திப்பூ ரூ. 240 -க்கும் ஏலம் போயின.

Advertisement

Advertisement

இந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.1,600, சம்பங்கி கிலோ ரூ. 120, அரளி கிலோ ரூ. 200, ரோஜா கிலோ ரூ. 200, முல்லைப்பூ கிலோ ரூ. 800, செவ்வந்திப்பூ ரூ. 180க்கும் ஏலம் போயின. தற்போது விஷேச நாள்கள் ஏதுமில்லாததால் பூக்கள் விலைச் சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments