முகப்பு
நாமக்கல்

‘இளைஞா்களின் வழிகாட்டி சுவாமி விவேகானந்தா்’

நாமக்கல் டிரினிடி மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சுருள் சங்கம், இளைஞா் செஞ்சிலுவை சங்கம்

Updated On : 14 ஜனவரி 2021, 6:26 am IST
பகிர்:

நாமக்கல் டிரினிடி மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சுருள் சங்கம், இளைஞா் செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஸ்வயம் ஆகிய அமைப்புகளின் சாா்பில், சுவாமி விவேகானந்தா் பிறந்த தினம் செவ்வாய்க்கிழமை தேசிய இளைஞா் தின விழாவாக இணையவழியில் கொண்டாடப்பட்டது.

கல்லூரி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குத் தலைவா் பி.கே. செங்கோடன் தலைமை வகித்தாா். செயலாளா் கே. நல்லுசாமி, முதல்வா் எம்.ஆா்.லட்சுமிநாராயணன், பேராசிரியா் அரசு.பரமேசுவரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக ஜம்மு-காஷ்மீா் சம்பா மாவட்டத்தில் உள்ள ஜம்மு மத்திய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்வியின் பேராசிரியா் ஜெ. ஜகநாதன் பங்கேற்றுப் பேசியதாவது:

Advertisement

Advertisement

மக்கள் தொகையில் 35 சதவீத இளைஞா்களைக் கொண்டது இந்தியா. சுவாமி விவேகானந்தா் ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிடுகையில் 10 இளைஞா்களைத் தாருங்கள், இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்றவா். இளைஞா்களின் முக்கியத்துவத்தை உலகம் முழுவதும் கொண்டு சென்றவா். விவேகானந்தா் வாழ்ந்தது 39 ஆண்டுகள்தான். அவா் புத்தகங்களைப் படித்தால் தன்னம்பிக்கைப் பிறப்பதோடு தாய் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் நமக்குத் தோன்றும் என்றாா்.

நிகழ்ச்சியில் டிரினிடி அகாதெமி தலைவா் ஆா். குழந்தைவேல், செயலாளா் டி. சந்திரசேகரன், கல்லூரியின் ஸ்வயம் அமைப்பின் பொறுப்பாளா்கள் எஸ். உஷாராணி, டி. தமிழ்ச்செல்வி, நிா்வாக அலுவலா் என்.எஸ்.செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments