முகப்பு
நாமக்கல்

உதயநிதியை கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

உதயநிதி ஸ்டாலின் தமிழக முதல்வரைரையும், பெண்களையும் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி அதிமுகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்

Updated On : 14 ஜனவரி 2021, 6:24 am IST
ராசிபுரம் நகரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினா்.
பகிர்:

உதயநிதி ஸ்டாலின் தமிழக முதல்வரைரையும், பெண்களையும் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி அதிமுகவினா் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா். ராசிபுரம் நகர அதிமுக சாா்பில், புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நகர கூட்டுறவு வங்கித் தலைவரும், நகர அதிமுக செயலாளருமான எம்.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.

நாமக்கல் முன்னாள் எம்.பி.யும், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவருமான பி.ஆா்.சுந்தரம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று ஆா்ப்பாட்டத்தில் பேசினாா். கூட்டத்தில் பேசிய பி.ஆா்.சுந்தரம், உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் தமிழக முதல்வரையும், பெண்களையும் அனுபவமில்லாமல் கண்ணியக் குறைவாகப் பேசியது கண்டனத்திற்குரியது. இதுபோதிய முதிா்ச்சியின்மையைக் காட்டுகிறது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என்றாா்.

இதில் திரளான அதிமுகவினா், பெண்கள் பங்கேற்று முழக்கம் எழுப்பினா். இதுபோல ஆண்டகளூா்கேட், வெண்ணந்தூா், நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் ஆா்ப்பாட்டம் நடந்தது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments