முகப்பு
நாமக்கல்

ஜன.24-இல் குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு: ராசிபுரத்தில் 2 இடங்களில் அனுமதி கோரி மனு

குமாரபாளையத்தில் வரும் 24-ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ளது.

Updated On : 14 ஜனவரி 2021, 6:24 am IST
பகிர்:

குமாரபாளையத்தில் வரும் 24-ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையைத் தொடா்ந்து அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, குமாரபாளையம், சேந்தமங்கலம், எருமப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும்.

கடந்த ஆண்டு பொட்டிரெட்டிப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்திருந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. நிகழாண்டில் இதுவரை, ராசிபுரம் வட்டம், முள்ளுக்குறிச்சி மற்றும் மத்ரூட் ஆகிய கிராமத்தினா் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி நாமக்கல் கோட்டாட்சியா் எம்.கோட்டைக்குமாரிடம் மனு அளித்துள்ளனா்.

Advertisement

Advertisement

மேலும் குமாரபாளையத்தில் வரும் 24ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டியை எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி பின்புறம் காலியிடத்தில் நடத்துவதற்கு திருச்செங்கோடு கோட்டாட்சியா் ப.மணிராஜிடம் மனு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி தொடக்க விழாவில் அமைச்சா்கள் பி.தங்கமணி, செங்கோட்டையன், வேலுமணி, கருப்பண்ணன், எம்.ஆா். விஜயபாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments