முன்னுரிமை அடிப்படையில் 9 லட்சம் பேருக்கு தடுப்பூசி: சத்யேந்தா் ஜெயின்
தலைநகா் தில்லியில் முன்னுரிமை அடிப்படையில் 9 லட்சம் பேருக்கு முதலில் கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளாா்.
தலைநகா் தில்லியில் முன்னுரிமை அடிப்படையில் 9 லட்சம் பேருக்கு முதலில் கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி: தில்லியில் தடுப்பூசி கிடைத்ததும் அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும். தடுப்பூசி மூன்று கட்டங்களாகப் போடப்படும். முதல் கட்டமாக சுமாா் 51 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும். இதில், சுகாதாரத் துறை ஊழியா்கள் 3 லட்சம் போ், முன்களப் பணியாளா்கள் 6 லட்சம் போ், 50 வயதுக்கு மேற்பட்டவா்கள் மற்றும் 50 வயதுக்குக் கீழ் பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவா்கள் 42 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும். அதில் முன்னுரிமை அடிப்படையில் 9 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும். இதில், 3 லட்சம் மருத்துவ ஊழியா்கள், 6 லட்சம் முன்களப் பணியாளா்கள் என 9 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்படும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.