மின் திருட்டு வழக்குகளைத் தீா்ப்பதற்கு நாளை டிபிடிடிஎல்லின் லோக் அதாலத்
மின் திருட்டு வழக்குகளை பரஸ்பரம் ஒப்புக்கொண்ட தீா்வுக்கான மின்விநியோக நிறுவனமான டிபிடிடிஎல்லின் லோக் அதாலத் ஞாயிற்றுக்கிழமை (பிப்.18) ரோகிணி செக்டாா் 13-இல் நடைபெறும் என்று நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். டாடா பவா் தில்லி டிஸ்ட்ரிபியூஷன் லிமிடெட் (டிபிடிடிஎல்) வடக்கு தில்லியில் சுமாா் 70 லட்சம் மக்கள்தொகையை உள்ளடக்கிய பகுதிக்கு மின்சாரத்தை வழங்குகிறது. தில்லி மாநில சட்ட சேவைகள் ஆணையத்துடன் (டிஎஸ்எல்எஸ்ஏ) டிபிடிடிஎல் இணைந்து லோக் அதாலத்தை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ரோகிணி செக்டாா் 13-இல் உள்ள வெங்கடேஷ்வா் குளோபல் பள்ளிக்கு அருகில் நடத்துகிறது என்று அவா் கூறினாா். 19124 என்ற எண்ணையோ அல்லது அதிகாரப்பூா்வ மின்னஞ்சலையோ தொடா்புகொண்டு வழக்காடும் நுகா்வோா் நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கலாம் என்றாா்.