முகப்பு
நூல் அரங்கம்

குகை மனிதனும் கோடி ரூபாயும்

பொருளாதாரமும், உளவியலும் இணைந்த "பொருளாதாரச் செயலியல்' (Behavior Economics) என்னும் துறை தமிழில் அதிகம் எழுதப்படாத விஷயமாக

Updated On : 22 ஏப்ரல் 2013, 3:09 am IST
பகிர்:

குகை மனிதனும் கோடி ரூபாயும் - பி.பாலசுப்ரமணி; பக்.152; ரூ.100; சந்தியா பதிப்பகம், சென்னை-83; )044 - 2489 6979.

பொருளாதாரமும், உளவியலும் இணைந்த "பொருளாதாரச் செயலியல்' (Behavior Economics) என்னும் துறை தமிழில் அதிகம் எழுதப்படாத விஷயமாக இருந்த குறையை நீக்கியுள்ளது இந்த நூல்.

சிந்தனையிலும், அறிவிலும் இன்றைய மனிதர்கள் பல உச்சங்களை எட்டிவிட்டாலும், பணத்தைக் கையாளுவதில் குகைகளில் வாழ்ந்த ஆதிமனிதர்களின் குணமே இப்போதும் மேலோங்கி இருக்கிறது என்று கூறும் நூல்.

Advertisement

Advertisement

 பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது சாலையே இல்லாத ஊருக்கு காற்றே இல்லாத  டயர் மாட்டிய வண்டியில் மிக வேகமாகச் செல்வது போன்று தூக்கி தூக்கி போடக்கூடியது  என்பது ரசனைக்குரிய உவமை.

 மனித மனம் ஒரு வளமான நிலம். ஏதாவது ஒரு கருத்து அதில் விதையாக விழுந்துவிட்டால், அது பெரும்பாலும் அழிவதில்லை. தகுந்த சூழ்நிலை ஏற்படும்போது மெல்ல மெல்ல மேலே வந்துவிடும். பின்னர் அதுவே நமது புத்தியின் ஒரு பகுதியாக மாறிவிடும். மனிதர்களின் பொருளாதார கணக்கீடுகள் பெரும்பாலும் இந்த புத்தியின் அடிப்படையிலும், ஆழ்ந்த நம்பிக்கையின் மீதும்தான் அமைகிறது என்பது தெளிவுபட விளக்கப்பட்டுள்ளது. பொருத்தமான திருக்குறளும், அதன் விளக்கமும் நூலில் இடம் பெற்றுள்ளது கூறப்படும் கருத்துகளுக்கு கூடுதல் வலு சேர்க்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.